Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Friday, July 28, 2006

முஸ்லிம்களும் யாகுதிகளும்

முஸ்லிம்களும் யாகுதிகளும் அண்ணன் தம்பிகளாக நூற்றாண்டுகள் பழகினார்கள். கடந்து வந்த பல நூற்றாண்டுகளில் கடந்த 50 வருடங்களை தவிர முஸ்லிம்கள் யாஹீதிகளை வெறுத்ததாக சரித்திரம் இல்லை. யாஹீதிகளின் நிரந்தர எதிரி கிருத்துவர்கள்தான் என்று இருந்தது சமீப காலம் வரை.

உலகம் முழுவதும் யாகுதிகள் சித்திரவதை படுத்துவது எத்தனையோ நூற்றாண்டுகளாக வழக்கம். கிருத்துவ மதம் ஓங்க ஓங்க யாகுதிகளின் மேல் வெறுப்பை வளர்த்துக்கொண்டது. ஐரோப்பிய சரித்திரத்தில் யாகுதிகளின் ரத்தம் ஓடாத சகாப்தங்கள் கிடையாது என்று ஆனது.

ஆனால், இன்று முஸ்லிம்களும் யாஹீதிகளும் எலியும் பூனையுமாக ஆகிவிட்டார்கள். ஹிஜ்புல்லா என்ற விஷ பிராணி லெபனானில் பல வருடங்களாக குடித்தனம் பண்ணி கொழுத்து வருகின்றது என்பது வெளிப்படை. இதற்கு எந்த நாடும் கண்டிக்க முனைய வில்லை. இந்தியாவையும் சேர்த்துதான். தீவிரவாதம் எந்த வடிவில் இருந்தாலும் நாங்கள் கண்டிக்கிறோம் என்ற கீரல் விழுந்த ரெகார்டையே கேட்டு கேட்டு அலுத்துவிட்டது. ஆனால், இவர்களால் ஒன்றும் பிடுங்க முடியவில்லை.

இஸ்ரேலின் இப்போதைய போர் வெறி அளவுக்கு அதிகமானது. அது நிச்சயம் கண்டிக்க வேண்டியது.

ஆனால், அவர்கள் இந்த எதிர்வினை புரிந்துகொள்ளகூடியது. (இது சப்பைகட்டல் இல்லை. விளக்க பார்வை அவ்வளவே) இந்த உலகில் எந்த ஒரு சமுதாயமும் மற்ற சமுதாயம் அழிய வேண்டும் என்று முயற்சிக்க அவர்களுக்கு உரிமை இல்லை. ஆனால், ஹிஜ்புல்லா என்ற ஒரு சமுதாயம் இதற்காகவே ஜிகாத் நடத்தி வருகிறார்கள். இதை எந்த தன்மானமுள்ள சமுதாயம் சகிக்க முடியாதது.

லெபனான் ஒரு அற்புதமான நாடு. அங்கு க்ரிஸ்துவர்களும், யாஹீதிகளும், முஸ்லிம்களும் கலந்து எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். அவர்கள் பெரும்பாலும் ஏழைகள். அரபிக்கார்ர்கள் போன்று திடீர் பெட்ரோலில் கொழுத்தவர்கள் கிடையாது. அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அவர்கள் குடும்ப பொருளாதாரம் மேன்பட வேண்டும் என்பதே. ஆனால், இன்று 30% லெபனான் பிரஜைகள் அகதிகளாக நாட்டுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

இவர்களுக்காக முதலில் கடமைப்பட்டது மத்திய கிழக்கு பணக்கார நாடுகள்தான். ஆனால், அவர்கள் *** கூட அசைக்கவில்லை.

எல்லோரையும் போல வாய்சவடால் விட்டு கும்பலில் கத்தி ஓய்ந்துவிடுகிறார்கள்.



மரியம் யாஹ்யா மருஹ். 75 வயது. விடிகாலை 4.30 க்கு தொழுகைக்கு எழும்போது ராக்கெட்டால் வீழ்த்தப்பட்டார். அவர் குடும்பத்தில் 15 பேரில் 6 பேர் மட்டுமே பிழைத்தார்கள். அவர் மகனும் அந்த மகனின் 5 மகன்களும் இறந்தவர்களில் அடக்கம். 'இஸ்ரேலை நாங்கள் எப்போதுமே வெறுத்ததில்லை. ஆனால், இதுநாள்வரை' என்கிறார் மரியம்.



15 வயது காதீர் ஷைத்தோ. ஷியா. பள்ளி மாணவி. தாடை வாயில் இழப்பால் பேச்சை இழந்துள்ளார். ராக்கெட் தாக்கலில் முகத்தில் புண் மற்றும் எரிகாயம் அதிகமாக. பேரூட்டில் இருக்கும் சொந்தக்கார்ர்களால் 23 ஆம் தேதி ஒரு மினி பஸ் இவர்களை மீட்க வந்து அதில் இவர்கள் ஊரை விட்டு ஓடும் போது ராக்கெட் தாக்கம். மூன்று பேர் இறந்தது இவளுக்கு தெரியும். கடைசியாக ராக்கெட் விழுந்தபோது, வயதான தன் பக்கத்து வீட்டு காரருக்கு இடம் கொடுக்க எழுந்த தந்தை, பின் என்ன ஆனார் என்று இவருக்கு இன்னம் சொல்லப்படவில்லை.

====================

An Eye for an Eye only makes the whole world blind!!!

எங்களால் கண்ணீர் மட்டுமே விட முடிகிறது. அதுவும் ரொம்ப யோசனைக்குபின்.

Tuesday, July 25, 2006

தமிழ்மண வம்புகளுக்கு ஒரு மாற்று

RIGHT TO INFORMATION ACT. அதாவது, தகவல் அறியும் உரிமை சட்டம்.

உங்களைப்பற்றி தெரியாது. ஆனால், எனக்கு இந்த சட்டத்தில் மிகவும் லயிப்பு ஏற்படுகிறது.

சமீப காலத்தில், நம் சர்க்கார் பண்ணின ஒரே நல்ல கார்யம் இது என்று நினைக்கிறேன். இந்த சட்டம் இந்தியாவில் ஒரு முக்கியமான திருப்புமுனை என்று தோன்றுகிறது.

இந்த சட்டம் தீர்மானமாக புழக்கத்தில் வந்து அதே சமயம் நம்மால் கொஞ்சமாவது உபயோகிக்கப்பட்டால் இது பல விழயங்களில் நம் அரசாங்கத்தை மேன்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்.

இந்த சட்டத்தை பற்றி அதிகமாக பிரசங்கம் பண்ண இங்கே நான் முனையவில்லை. இந்திய அரசாங்கத்திற்கான பல வெப்சைட்கள் இதற்காக இயங்குகின்றன. இதற்காக ஆர்வம் இருக்கிறவர்கள் அதற்கான பல விஷயங்களை இன்டர்நெட்டிலேயே பேஷாக பார்த்துக்கொள்ளலாம்.

இந்த சட்டத்தில் எனக்கு பிடித்த பல விஷயங்கள் இருக்கின்றன.

முதலாவது, இது எடுத்த எடுப்பிலேயே இந்திய சர்க்காரின் பழைய நூற்றுக்கணக்கான சட்டங்களை தூக்கி குப்பையில் போட்டு விடுகிறது. அதாவது, இந்த சட்டத்தின் பிரகாரம், வேறு எந்த சட்டமாவது இந்த சட்டத்துக்கு விரோதமாக இருந்தால், அந்த விரோதமான பழைய சட்டம் செல்லாது. இங்கு இந்த சட்டம் மட்டும்தான் செல்லும். அதாவது, இந்த சட்டமே வேத வாக்கு (இல்லை பெரியார் வாக்கு என்று வைத்துக்கோங்களேன்!)

இரண்டாவது, இந்த சட்டம் நம் சோப்ளாங்கி சர்க்காரின் முதலாவது ‘ரிவர்ஸ்” பொறுப்பான சட்டம்.

அதாவது, இந்த சட்டத்தில்தான் 30 நாளுக்குள் நம் கேள்விக்கு பதில் சொல்லாவிட்டால் ஆட்டோமாட்டிக்காக அந்த சர்க்கார் டிபார்ட்மெண்டும், அந்த ஆபீஸரும் தப்பு பண்ணினார்கள் என்று சட்டமே தீர்மானித்துக்கொள்ளும்.

அதாவது, இத்தனை நாளுக்குள் இந்த விஷயத்தை செய்து முடிக்கவேண்டியது இந்த சர்க்கார் குமாஸ்தாக்களின் கடமை என்று இப்போதுதான் புரிந்துகொண்டிருக்கிறார்கள் என்று தோன்றுகிறது.

எல்லா சட்டத்திலும் இது மாதிரி வந்தால் எத்தனை நன்றாக இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள் (கனவு கண்டுதான் பாருங்களேன்.) ஒரு மாசத்தில் ரேஷன் கார்ட் கொடுக்காவிட்டால் ஃபைன். இரண்டு மாசத்தில் பேஷண்ட் குணமாகாவிட்டால் ஃபைன். பத்து மாசத்தில் பாலம் கட்டாவிட்டால் சிறை. ஒரு வருஷத்தில் ஸ்கூல் வித்யார்த்திகள் பாஸ் ஆகாவிட்டால் வாத்யாருக்கு சம்பளம் கட். என்றெல்லாம் வந்தால் எத்தனை சந்தோஷமாக இருக்கும்.

ஆனால், இது இப்போதைக்கு இந்த இன்ஃபர்மேஷன் சட்டத்தில் தான் ஆரம்பித்திருக்கிறார்கள்.

மூன்றாவது விஷயம். இந்த சட்டத்தில் ஒரு ஃபார்மாலிட்டீஸூம் இல்லாததுதான். இல்லாவிட்டால், வழக்கமான எல்லா சட்டங்களை மாதிரி, ஒரு பதினைந்து ஃபாரம், இருபது ரூல்ஸ் என்றெல்லாம் போட்டு இந்த சட்டத்தை தொட்டிலிலேயே கழுத்தை நெருக்கி ஊருக்கு அனுப்பியிருப்பார்கள்.

ஆனால், இந்த சட்டம் முதல் தடவையாக, ஒரு மூளையுள்ள ஒரு மஹானுபாவனால் எழுதப்பட்டிருக்கிறது.

அதாவது, இந்த சட்டத்தில் நீங்கள் ஒரு பதினைந்து பைசா போஸ்ட் கார்டில் ஒரு லெட்டர் போட்டால் போறும். ஒரு பார்ம், பார்மாலிடி என்று எந்த புண்ணாக்கும் தேவையில்லை. யாருக்கு எழுத வேண்டும் என்றும் தெரிந்து கொள்ளவேண்டாம். “Public Information Officer” பொது தகவல் வழங்கும் அதிகாரி என்று எழுதி (அது எழுதக்கூட வேண்டாம் என்று சிலர் சொல்கிறார்கள்) அந்த ஆபீஸில் குடுத்துவிட வேண்டும். எந்த பிராஞ்சிலும் இதை கொடுக்கலாம். அதை அவர்கள் வாங்கி சரியான இடத்துக்கு அனுப்ப வேண்டும்.

சரி, ஆபீஸ் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லையா. நோ ப்ராப்ளம். உங்கள் ஊர் கலெக்டர் ஆபீஸிக்கு அந்த போஸ்ட் கார்டை எழுதினால் அவர்கள் அதை சரியான குமாஸ்தாவை கண்டுபிடித்து கொடுத்துவிடுவார்கள்.

சரி சார், எனக்கு கலெக்டர் ஆபீஸ் கூட தெரியாது, சரியான பேக்கு என்கிறீர்களா. நோ ப்ராப்ளம். எந்த கவர்ண்ட்மெண்ட் ஆபீஸிலும் நுழைந்து இந்த கார்டை கொடுத்தால் எந்த ஒரு கவர்ண்ட்மெண்ட் ஆபீஸூம் இதை சம்பந்தப்படுத்த குமாஸ்தாவிடம் கொடுத்துவிடுவார்களாம்.

பேஷ்! பேஷ்! கேட்க பரம மங்களமாய்த்தான் இருக்கிறது.

ஒரே ஒரு சிலவு, நீங்கள் வறுமைக்கோட்டுக்கு மேலே இருந்தால், இதற்கு 10 ரூபாயோ என்னவோ சேர்த்து அனுப்ப வேண்டுமாம். இது டெல்லி சர்க்காருக்கான சார்ஜ். வழக்கம்போல, இங்கு தமிழ்நாட்டு திராவிட குஞ்சுகள் இதை இன்னும் கஷ்டமாக்கி தமிழ்நாட்டுக்கு மட்டும் இந்தியாவிலேயே உசத்தியாக 50 ரூபாய் சார்ஜ் என்று சொல்லியிருக்கிறார்கள்.

சரி, மேட்டருக்கு வருகிறேன். என்ன கேட்கலாம் என்றுதானே கேட்கிறீர்கள். என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்.

எங்கள் வீட்டு வாசலில் குப்பை அள்ள காண்ட்ராக்ட் யாருக்கு? கடந்த நாலு மாசத்தில் யார் யார் குப்பை அள்ளினார்கள்? எத்தனை மணிக்கு அள்ளினார்கள்? அவர்களின் வருகை ஜப்தா காப்பி கேட்கலாம்.

எங்கள் ஊர் ரோட் காண்ட்ராக்ட் எந்த கரை வேஷ்டிக்கு போய் இருக்கு? அதை எந்த இஞ்சினியர் பார்த்தார்? அதன் ரிகார்ட் என்ன?

வேணும் என்றால், நீங்களும் அவருடன் கூட ரோட் போடுவதை இன்ஸ்பெக்ஷன் பண்ண ப்ரியம் என்று சொன்னால், உங்களை அவர்கள் அழைக்க கடமைப்பட்டவர்கள். நீங்கள் கேட்டால் அந்த ரோட்டின் சாம்பிளும் வாங்கிக்கலாம். கொடுக்க கடமைப்பட்டவர்கள். அதை டெஸ்ட் லேபில் கொடுத்தால் அந்த ரோடு எத்தனை மாதம் வரும் என்று சொல்லி விடுவார்கள்.

சரிசார். இந்த மாதிரி பொதுநல சேவைதானா? எனக்கு பர்ஸனலாக என்ன ப்ரயோஜனம் என்று கேட்கிறீர்களா? (நான் கேட்டேன்). நீங்கள் கொடுத்த ரேஷன் கார்ட், கரண்ட் கனெக்ஷன், லிப்ட் லைசன்ஸ், எல்லாத்துக்கும் இப்படி கேட்கலாம்.

எத்தனை நாள் என் பேப்பர் ஒவ்வொருத்தர் டேபிளிலும் இருந்தது என்று லிஸ்ட் கேட்கலாம். அந்த ஆபீஸர்கள் எல்லாம் அந்த பேப்பரில் என்ன செய்தார்கள்? தேதிவாரியாக சொல்லுங்கள் என்று கேட்கலாம். நார்மலாக உங்கள் ஆபீஸ் விதிப்படி எத்தனை நாளாகும்? லேட் ஆகியிருந்தால், ஏன் காலதாமதம் ஆனது. இப்படி லேட் பண்ணினதுக்கு அவர்கள் மேலே என்ன ஆக்ஷன் எடுக்கப்பட்டது? இப்படி தாறுமாறாக எல்லாம் கேட்கலாம்.

நிறைய விஷயங்களில் இப்படி கேட்டாலே வேலை நடந்துவிடுகிறது என்று பல சங்ககாரர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

நிறைய சங்கங்கள் இதில் முனைந்து உங்களுக்கு சரியான பதில் வருவதற்கு எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்று கத்துக்கொடுக்கிறார்கள். (என் வீட்டில் இதில் ஒரு குரு இருக்கிறாள் - என் பார்யாள். அதனால், சங்கம் தேவையில்லை...)

இவ்வாறான காரணங்களால், பல ஸ்தாபனங்கள் இந்த சட்டத்தை தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகின்றன. டெல்லியில் பரிவர்தன் (www.parivartan.org) என்ற சங்கத்துக்காரர்கள் இந்த சட்டத்தை வைத்துக்கொண்டு ஒரு காலனியையே திருத்திவிட்டார்களாம். படித்துப்பார்த்தால் ஆச்சரியமாகத்தான இருக்கிறது.

போன வருஷம் தான் லண்டனிலும் இப்படி ஒரு சட்டம் வந்ததாக சொல்கிறார்கள். அப்படி பார்த்தால் இந்த வேகம் ரொம்ப ச்லாக்யம்தான்.

இந்த சட்டத்தை பார்த்து பயந்துபோன நம் குமாஸ்தாக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தம் வேலையை காட்ட ஆரம்பித்துவிட்டார்களாம். போன வாரம், புதுசாக, இந்த சட்டத்தில் ஒரு ஓட்டை போட்டிருக்கிறார்கள். அதாவது, குமாஸ்தாக்கள் ஃபைல்களில் போட்ட நோட்ஸ்களை யாரும் கேட்க முடியாது என்று. அவர்கள் போட்ட நோட்ஸ்கள் அவர்களுக்கே புரியாது. அதனால், இது ஒன்றும் பெரிய குறை இல்லை.

கடந்த ஒரு மாசமாக மெட்ராஸிலும் இது பற்றி பல சத்சங்கங்கள் நடத்தினார்கள். இதனால், பல பேருக்கு இது பற்றி தெரிய வந்திருக்கிறது.

போன ஞாயிற்றுக்கிழமை என் மைலாப்பூரில் நடந்த மீட்டிங்குங்கு போனேன். CAG என்ற ஸ்தாபனக்கார்ர்கள் தலைமையில் நன்றாக ஏற்பாடு செய்திருந்தார்கள். (chennairti.googlepages.com)

இதில் எனக்கு ஆச்சரியமான ஒரு விஷயம் இதுதான். இதில் வாலண்டீர்கள் எல்லோரும் சின்ன இளைஞர்கள். ரொம்பவும் சந்தோஷமாக இருந்தது.

குரு என்பவர் இந்த சட்டத்தை பிரசங்கம் செய்து அறிமுகப்படுத்தி அனுபவ பூர்வமாக சொன்னார். சாரதா என்ற ஒரு இளைஞி இதுவரை இந்த சட்டம் என்ன சாதித்திருக்கிறது என்று சின்னதாக பேசினாள். அருண் என்று ஒரு வக்கீல் கேள்வி கேட்கும் டெக்னிக்கை சொல்லிக்கொடுத்தார்.



முத்தாய்ப்பாக, ப்ரபு என்று ஒரு க்ருஸ்துவ எவாஞ்சலிஸ்ட் பாதிரி எதேச்சையாக கேள்விப்பட்டு உள்ளே வந்து பேசினார்.

மிகவும் ப்ராக்டிகலாக, நெகிழ்ச்சியாக அவர் பேசினார். க்ருஸ்துவ தர்மத்தை ஒருவன் பாலோ பண்ணினால், அவன் லஞ்சம் கொடுக்க கூடாது என்று சொன்னார். (அப்படி பார்த்தால், க்ருஸ்துவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் கிடையாதுதான்) அது அவர்கள் வேதத்துக்கு விரோதமாம்.

அவர் வாழ்நாள் முழுக்க ஒரு பைசா லஞ்சம் கொடுத்ததில்லை என்று சொன்னார். (நான் அவர் பேச்சை நம்புகிறேன்). இத்தனைக்கும் அவர் ஒரு பிஸினஸ்மேன்.

பின்னார், எம்.எல்.ஏ. சேகர் பேசினார் (அவரும் எதேச்சையாக உள்ளே நுழைந்தவர் என்றார்) நன்றாக இருந்தது.

அந்த படங்களை இங்கு கொடுத்திருக்கிறேன்.



நாம் இப்போதெல்லாம் மாங்கு மாங்கு என்று தமிழ்மணத்தில் நிறைய எழுதுகிறோம்.

வாஸ்தவத்தில் பார்த்தால், பல விஷயங்கள் கவைக்கு உதவாததாக இருக்கின்றன. வேறு சில, பலரை வம்புக்கு இழுக்கின்றன. மேலும் சில, சுயபுராணம் படிக்கின்றன. மேலும் சில, என் அபிப்ராயம் இப்படி என்று கருத்து திணிப்பு பண்ணுகின்றன.

இந்த மாதிரி அக்கப்போரில் சுவாரசியமாகத்தான் இருக்கிறது என்று நானும் ஒத்துக்கொள்கிறேன். அதோடு, அதில் கொஞ்சம் நிறுத்திக்கொண்டு (அல்லது இன்னும் விசேஷ டயத்தில்) நாம் எல்லோரும் மாசத்துக்கு ஒரு லெட்டராவது இந்த சட்டத்து பிராகாரம் எழுத வேண்டும்.

சின்ன வம்பு வேண்டுமானால், ரோடில் லைட் எரியவில்லை என்று கார்பரேஷனுக்கு எழுதலாம். இல்லை, என் பக்கத்து ரோடை ஆக்கிரமித்து நடக்கும் ஒரு கடை ஏன் லைசன்ஸ் கொடுத்தீர்கள் என்று எழுதலாம்.

பெரிய லெவலில் கேட்க வேண்டும் என்று ஆசையாக இருந்தால், டெல்லி சர்க்காருக்கு, என் எம்.பி.யின் தொகுதி மேம்பாட்டு நிதிக்கான பட்ஜெட், வரவு செலவு என்று கேட்டு எழுதலாம்.

அதுவும் இல்லை, சண்டைதான் வேண்டுமானால், பக்கத்து பில்டிங் CMDA வில் அப்ரூவல் ஆகியிருக்கிறதா, அது சரியாக கட்டப்பட்டிருக்கிறதா என்று குடையலாம்.

ஆக மொத்தம், எல்லோரும் இதில் கொஞ்சம் உற்சாகம் காட்டினால், இந்த சட்டம் நிஜமாகவே நம் எல்லாருக்கும் ஒரு வரபிரசாதம் என்று தோன்றுகிறது. இந்த குமாஸ்தாக்கள் இந்த சட்டத்தை இன்னும் கெடுக்கும் முன்னே நாம் முந்திக்கொள்ள வேண்டும்.

Thursday, July 13, 2006

வேட்டில் ஓட்டு!


வைச்சிட்டான்யா வேட்டு!!

பொறுக்குங்கய்யா ஓட்டு!!!


செய்தி 1:




'சிமி தீவிரவாத குழு இல்லை. ஒருவேளை அதில் சிலர் தீவிரவாதத்தில் ஈடுபடலாம்.'
- முலாயம் சிங் யாதவ்

******








செய்தி: 2 :


குண்டு வெடிப்புக்கு எதிராக பி.ஜே.பி நடத்தும் ஆர்ப்பாட்ட கூட்டங்களுக்கு நரேந்திர மோதி தலைமை தாங்குவார்






செய்தி : 3


முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க அரசாங்கம் முடிவு எடுத்துள்ளது என்று அர்ஜூன் சிங் சொன்னதை கேட்ட தழிழக முதலைமைச்சர் உடனே 'முஸ்லிம்கள், கிருத்துவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு லெட்டர் அன்னை சோனியாவுக்கு எழுதியுள்ளார். குண்டு வெடிப்பு பற்றி கேட்டதற்கு 'குண்டா, வெடிப்பா..... அப்படீன்னா' என்று வாயை மூடிக்கொண்டு சென்று விட்டார்.

****
செய்தி : 4
முஸ்லிம் சமுதாய



பத்திரிக்கை 'மில்லி கேசட்' டின் நேற்றைய இதழில் சிமியை புகழ்ந்து எழுதப்பட்டுள்ளது.

காங்கிரசுடன் சிமிக்கு நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்றும், தமிழகத்தில் 'தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம்' சிமியின் ஒரு அங்கம் எனவும், அது கடந்த தேர்தலில் கருணாநிதி வெற்றி பெற அயராது உழைத்ததாகவும், பிரதமர் மன்மோகன் சிங்குடன் சிமி அமைப்பாளர்கள் பலர் பலமுறை சந்தித்து உரையாடிய போது காங்கிரஸ் அவர்களை ஆதரித்தது என்றும் அந்த பத்திரிக்கையில் சொல்ல பட்டுள்ளது.


யதர்


YATAR

ஏ காட்டேரி!

எத்தனை ரத்தம் குடிப்பாய் இன்னும் நீ!

போதும். உங்கள் அரசியல், மத சண்டைகளை உன் விகார மனதுக்குள் நிறுத்திக்கொள்.

மனிதனை மனிதனாக வாழ விடு



இறந்த ஆன்மாக்களுக்கு எங்கள் இருதய அஞ்சலி!