Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Thursday, June 22, 2006

தலித் கிருத்துவர்கள்

கிருத்துவர்களின் மதப்பிரசாரம் ஒரு நூறு வருடம் நிறுத்தப்பட வேண்டும். அந்த பணம், கிருத்துவ தலித்துக்களுக்காக செலவிடப்பட வேண்டும்.

சொல்பவர் நான் இல்லை. உடனே காறித்துப்பி பின்னோட்டம் இட வேண்டாம்.

‘ஏழை கிருத்துவர்களின் விடுதலை இயக்கம்’ அமைப்பின் அங்கமான தலித் கிருத்தவர்களின் தேச மாநாட்டில் அதன் தலைவர் R.L.Francis இவ்வாறு சொல்லியிருக்கிறார்.

அவர் பேசியது தலித் கிருத்துவர்களின் மனக்குமுறல்களை வெளிக்காட்டியது. கிருத்துவ சர்ச் அமைப்புகள் தலித் கிருத்துவர்களை புறக்கணிக்கின்றன. மேல்ஜாதி கிருத்துவர்கள் மட்டுமே சர்ச்சுகளில் பதவி பெறுகிறார்கள், என்கிறார் அவர்.

இந்தியாவில் அரசாங்கத்துக்கு அடுத்து 40,000 உடல்நல, கல்வி, மற்றும் பிற சமுதாய நிறுவனங்களை நடத்தும் மிகப் பெரிய சக்தி கிருத்துவ சர்ச். இந்த சர்ச்சுகள் இந்தியாவின் மிகச்சிறந்த கல்வி நிறுவனங்களை நடத்துகின்றன. ஆனால், இது வசதிபடைத்த மேல் மட்டவர்களுக்கே நடத்தப்படுகின்றன. தலைநகர் டில்லியில் கூட தலித்துக்கள் பங்கேற்கும் கிருத்துவ கல்வி நிறுவனங்கள் மிக குறைவு (என்கிறார் பிரான்சிஸ்).

இதுவரை, தலித் கிருத்துவர்கள் மேம்பாட்டிற்காக சர்ச் ஒரு கல்வி கவுன்சில் மாதிரி அமைப்பை கூட ஏற்படுத்தியதில்லை. இதனால், சர்ச்சின் பணம் முழுதும் மேல்மட்ட கிருத்துவர்களின் கையிலேயே இருக்கிறது. தலித் கிருத்துவர்களின் நலனை புறக்கணித்து சர்ச் பிறர் நலனுக்காக இந்த பணத்தை உபயோகப்படுத்துகிறது, என்கிறார் பிரான்சிஸ்.

ஒரு காரைத் துரத்தும் நாய் போல கிருத்துவ மதம் இந்து தலித்துக்களை துரத்தி ‘அறுவடை’ செய்கிறது (போப்பின் வார்த்தையில்). ஆனால், காரை நெருங்கி விட்ட நாய் போல, பின்னால் இவர்களை என்ன செய்வது என்று தெரியாமல் நடுவில் விட்டு விடுகிறது. (இந்த பாரா வேறு மசாலா. பிரான்சிஸ் சொன்னது இல்லை!)

கிருத்துவர்களும், சர்ச்சுகளும், கிருத்துவ மத்த்தினர் நடத்தும் பள்ளிகளிலும், சமூக அமைப்புகளிலும் தலித்துகளுக்கு இட ஒதுக்கீடு கொடுப்பதை கடுமையாக எதிர்க்கிறார்கள். ஆனால், கிருத்துவர்களுக்கு அரசாங்கத்திடம் இட ஒதுக்கீடு கேட்டு போராடுகிறார்கள், என்கிறார் பிரான்சிஸ். என்ன இரட்டை வேடம். இந்த இட ஒதுக்கீடு கேட்பது இவர்கள் ஆளுமைக்காகவே.

இந்த சர்ச்சுகளை நடத்தும் பிஷப்புக்கள் ரியல் எஸ்டேட்டுக்களை தன் மனம் போன படி சுய லாபத்திற்காக விற்பதும், வாங்குவதும் செய்கிறார்கள். தலித் நலனுக்காக வசூல் செய்த பணம், செலவழித்த பணம் எதுக்கும் கணக்கு இல்லை என்கிறார் பிரான்சிஸ்.

ஆனால், இந்த கிருத்துவ அமைப்புகள் மதமாற்ற பிரச்சாரத்திற்காக ஏராளமாக செலவழித்துக்கொண்டிருக்கின்றன. மதம் மாறிய கிருத்துவர்களின் நலனுக்காக சர்ச் ஒன்றுமே செய்வதில்லை என்கிறார் அவர்.

இந்த மிஷனரிகள் போட்டி போட்டுக்கொண்டு தலித் கிருத்துவர்களிடம் மூட நம்பிக்கையை வளர்க்கின்றன. மதப்பிராசர கூட்டங்களில் “குருடர்கள் பார்க்கிறார்கள், மூடர்கள் பேசுகிறார்கள்” என்றெல்லாம் மூட நம்பிக்கையை வளர்க்க பொய் பிரசாரம் செய்யப்படுவதாக அவர் சொல்கிறார்.

ஒருவேளை, தன் மன வலிமையால் யாராவது ஒருவர் ஒருவாறு குணமாகியிருந்தாலும், அதை இவர்கள் பெரிய பிரசாரத்துக்கு உபயோகப்படுத்தி மதகுருமார்களின் வலைகளில் மேலும் மக்களை விழ வைக்கிறார்கள், என்கிறார் பிரான்சிஸ்.

இந்த மாதிரி கூட்டங்களில், இதை நடத்தும் பாதிரியார் வியாதிப் பேயை (ghost of sickeness) வெளியேற ஆணையிடுகிறார். இவர் மதகுருமாரா இல்லை மந்திரவாதியா என்று சந்தேகம் வருகிறது என்கிறார் பிரான்சிஸ்.

இந்த தேசிய மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஒரு மனதாக எடுக்கப்பட்டன.

RESOLUTIONS PASSED UNANIMOUSLY AT THE 4TH NATIONAL ASSEMBLY OF DALIT CHRISTIANS ORGANISED BY POOR CHRISTIAN LIBERATION MOVEMENT ON 6 AUGUST 2003 IN THE SPEAKERS HALL, CONSTITUTION CLUB, V.P. HOUSE, RAFI MARG, NEW DELHI:

2. மதமாற்ற பிரசாரம் சமுதாய மேன்பாட்டுக்கு வழிசெய்யவில்லை. அதனால், இதை 100 வருடம் நிறுத்தப்பட வேண்டும். அந்த பணம் மதம் மாறிய தலித் கிருத்துவர்களுக்காக செலவு செய்யப்பட வேண்டும்.

3. சர்ச் நடத்தும் பள்ளிகள், கல்லூரிகள், மேல் படிப்பு நிலையங்களில் தலித்துக்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்.

4. எல்லா சர்ச்சு நிறுவனங்களும் தங்கள் அமைப்பில் தலித் கிருத்துவர்களின் பங்கேற்பு பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.

இவர்கள் நடத்தும் ஏழை கிருத்துவர்களின் விடுதலை இயக்கத்துக்கு எல்லோரும் ஆதரவு தருவோம்.

பொய் பிரசாரத்தில் ஏமாந்து வாழ்க்கையில் ஏமாற்றத்தை ஏந்தியுள்ள இவர்கள் நம் ஆதரவுக்கு உரியவர்கள்.

போன செப்டம்பரில் இவர்கள் டெல்லியில் ஜன்தர் மந்தரில் சர்ச் நிறுவனங்களில் நிலவும் ஊழலை கண்டித்து மிகப்பெரிய தர்ணா நடத்தினார்கள். அப்போது அவர்கள் கிருத்துவ NGO க்கள் பணத்தை சூரையாடுவதை கண்டித்தார்கள். சர்ச் நிறுவனங்கள் ‘ஊழல், சாதி வெறி, வேண்டுபவர்களுக்கு ஆதரவு ‘ நிறைந்து இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்கள்.

1991 சென்சஸ்படி இந்தியாவில் 196.5 லட்சம் கிருத்துவர்கள் இருக்கிறார்கள் (தென்னிந்தியாவில் 107 லட்சம். வடகிழக்கு மாநிலங்களில் 36 லட்சம். மீதி பரவலாக.) தமிழ்நாட்டில் இருக்கும் 32 லட்சம் கிருத்துவர்களில் 65% தலித்துக்கள். மதம் மாறுவதால் சமுதாய மேன்மை கிடைக்கும் என்றால், இவ்வளவு அதிக விழுக்காடு தலித், ஆதிவாசிகளை கொண்டிருக்கும் கிருத்துவ மதம் தலித்துக்களுக்காக என்ன செய்கிறது என்று கேட்கிறார் பிரான்சிஸ்.

மதம் மாறிய பிறகு சாதி அடிப்படையில் இவர்களை நடத்துவது நிறுத்தப்பட வேண்டாமா? ஆனால், அப்படி நடக்கவில்லை.

1991 வரை இந்தியாவின் 134 கத்தோலிக்க பிஷப்புக்களில் ஒரு தலித் கூட இல்லை. (முதலாவதாக 1991ல் Bishop Ezra Sargunam உருவானார்.) கோவா, கேரளா தவிர கிருத்துவர்களில் தலித்துக்களே பெரும்பான்மை. ஆனால், அவர்களில் தலித்துக்களை காணுவதே கஷ்டமாக இருக்கிறது. பிஷப், விகார், பாதிரியார்கள், இயக்குனர்கள், விரிவுரையாளர்கள், கிருத்துவ மருத்துவமனைகளில் சர்ஜன்கள், மருத்துவ கல்லூரிகளில் சர்ஜன்கள் யாருமே தலித்துக்கள் மிக மிக குறைவு.

தமிழகத்தின் 13 பிஷப் கவுன்சில்களில் தலித்துக்கள் யாருமே இல்லை. தலித்துக்களை பலப்பல உயர் பதவிகளில் இன்று உட்கார்த்தி வைத்து பார்க்கும் இந்து மதத்திலிருந்து (ஏன் ஜனாதிபதி பதவி வரை அவர்களுக்கு உரிமையாக வழங்கப்படுகிறது) சமத்துவம், சமுதாய நீதி என்றெல்லாம் மனமாற்றம் செய்து அவர்களை ஆட்கொண்ட மதத்தில் அவர்கள் ஏமாற்றமும் சமுதாய அநீதியும் எதிர்கொள்கிறார்கள் என்பது கொடுமை.

வெறுக்க வைக்கும் தீண்டாமை முதலிய நடவடிக்கை குற்றச்சாட்டுக்களை தவறாமல் இந்து மத்த்தில் வைக்கும் இந்த புரட்டுவாதிகள், அந்த நம்பிக்கைகளை தகர்க்கும் இந்து மதவாதிகளை, தங்கள் பிரச்சாரத்துக்கு பலமில்லாமல் போய் விடும் என்று, சதி செய்து எதிர்க்கிறார்கள்.

ஆனால், இந்து மதத்தில் ஒவ்வாத இந்த தீண்டாமை எவ்வாறு பரவியது என்று ஒரு செக்குலர்வாதிகளும் நடுநிலையில் பார்ப்பது இல்லை. மேல்நாட்டு ‘அடிமை வியாபாரம்’ போன்று (அதெற்கும் இஸ்லாமிய, கிருத்துவ அமைப்புகள் பல நூறு வருடங்களாக ஆதரவு தந்ததை வசதியாக மறந்துவிடுகிறார்கள்) இந்த தீண்டாமை ஒரு சரித்திர-சமுதாய அரசியலமைப்பு சூழலை சார்ந்து எழுந்தது என்று தெரிந்தாலும் அதை புரட்டு பேசி மறைக்கிறார்கள்.

தீண்டாமை மட்டுமே தலித் கிருத்துவர்களின் சாபக்கேடு அல்ல. இன்றுவரை, மேல்சாதி கிருத்துவர்களுக்கும், தலித் கிருத்துவர்களுக்கும் கலப்பு மணம் மிகமிக அரிது. அப்படிப்பட்ட கலப்பு மணங்கள், இந்து சமுதாயத்தில் சாதாரணமாகி வருகின்றன என்பதால் இப்போதெல்லாம் இது ஒரு செய்தி கூட இல்லை. மேல்சாதி கிருத்துவர்கள் தலித் பாதிரியின் கையால் புனித நீர் வாங்க எதிர்க்கிறார்கள்.

பலப்பல கிருத்துவ கல்லறைகளிலும் தலித்துக்களுக்கும், மேல்சாதி கிருத்துவர்களுக்கும் சுவரெழுப்பி பிரிக்கப்பட்டுள்ளது. சாவிற்கு பின்னும் அவர்கள் மேல்சாதி கிருத்துவர்களின் மண்ணை கூட மிதிக்க முடியாது.

இவ்வாறு, கிருத்துவ அமைப்புகளில், தீண்டாமை சுவர்க்கத்திலும், நரகத்திலும் கூட நிரந்தரமாக்கப்படுகிறது. (செத்தபிறகு, சுவர்க்கமோ, நரகமோ நிரந்தரம் என்பது கிருத்துவ நம்பிக்கை).

விவரங்கள் இங்கே.

http://www.saxakali.com/southasia/PCLM.htm

Wednesday, June 21, 2006

வாசுவும் ஜெனிபர் லோபசும்

ரொம்ப நாளைக்கு அப்புறம் இரண்டுவாரம் முன்னால் வாசுவை அபிராமபுரத்தில் பார்த்தேன். சிக்னலில் பச்சைக்காக நின்றுகொண்டிருந்தான். என்னைப்பார்த்து கையை மட்டும் ஆட்டிவிட்டு அவசரமாக போய்விட்டான்.

ஆறு மாதம் கழித்து வாசுவை பார்ப்பதால் அவன் இன்னும் ஒரு சுத்து பெருத்திருப்பது தெரிந்தது. வழக்கம் போல ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் வாசுவின் பரப்பளவு ஏறிக்கொண்டே இருக்கிறது.

ஒவ்வொரு முறையும் இதற்கு மேல் இவனால் முடியுமா என்று நினைப்பேன், ஆனால், அவன் சாதித்துக்காட்டுவான்.

இந்த லைப்பில் ஏறினால் இறங்காத விஷயங்கள் இரண்டு. ஒன்னு விலைவாசி. இன்னொன்னு வாசுவின் உடம்பு. (மூனாவது, ரிசர்வேஷன் என்கிறீர்கள்தானே? அது எனக்கும் தெரியும். ஆனால், அந்த சண்டைக்குள் இப்போது போக வேண்டாம்..)

ஆனால், வாசு ஒல்லியாக வெடவெட என்று இருந்த காலமும் உண்டு. வாசுவை எனக்கு ஒரு 30 வருஷமாக நன்றாக தெரியும். திருவல்லிக்கேணி ஹிண்டு ஹைஸ்கூலில் என் பெஞ்ச் மேட். ஸ்கூலில் பளபள என்று ரவுண்டு முகத்தில் அழகாக ஸ்ரீசூர்ணத்துடன் எப்போதும் பிரஷ்ஷாக இருப்பான். அசப்பில் பார்த்தால் சின்னவயசு நடிகை பானுமதி மாதிரி. இப்போதும் அழகன்தான்.

ஆனால், ஒரே வித்தியாசம். அப்போதெல்லாம் ஒல்லியாக வெட வெட என்று இருப்பான்.

சி.ஏ. சேர்த்து முடித்தோம். நான் எல்.அன்.டி க்கும் அவன் டி.வி.எஸ் ஸூக்கும் போனோம். வேலை பார்க்க ஆரம்பித்ததில் இன்னும் இளைத்தான். நாங்கள் பந்தக்கால் என்று கேலி பண்ணுவோம். அப்புறம், ரொம்ப தைரியம் வந்து (அவனுக்கில்லை. அவன் அம்மாவுக்கு....) வேலைக்கு துபாய்க்கு போனான்.

வருடா வருடம் லீவுக்கு வரும்போது அவசியம் வந்து பார்த்துப்போவான். துபாய் போனதில் அவன் திருமண் போனது. ஆனால், அவன் இன்னும் ஒல்லியாகத்தான் இருந்தான்.

துபாயில் கல்யாணமாகி அவர்களுக்கு பையன் பிறந்தான். பையனோடு முதல் தடவை மெட்றாஸூக்கு வந்த போது ஆள் வெயிட் போட்டு பூசினால் போல் ஆகியிருந்தான்.

'என்னடா, தொந்தி. “பைசா சேரச்சேர தொப்பையும் பெருக்குமோ?” என்றேன்.

அவன் மனைவி பத்மா சிரித்துக்கொண்டே எல்லாம் எங்க அம்மாதான் காரணம் என்றாள். தூக்கிவாரிப்போட்டது.

அதாவது, துபாய்க்கு குழந்தையையும் பத்மாவையும் பார்த்துக்க வந்த மாமியாரின் பஞ்ச பக்ஷங்கள் மற்றும் உபசாரங்கள் என்று அர்த்தமாம். பத்மா என்னவோ எப்போதும்போல பஞ்சத்தில் அடிபட்டவள் மாதிரிதான் இருந்தாள். அவள் அம்மாவின் உபசாரம் அவளை தேற்றவில்லை என்று புரிந்தது.

'எனக்காக நெய்யும் பட்சணமும் பண்ணி வைப்பா, அம்மா. அதை இவர்தான் சாப்பிடுவார்....' என்று பத்மா லேசாக சிரித்தாள். வாசு வெட்கப்பட்டான்.

பின்னால், வருஷா வருஷம் ஒவ்வொரு தடவையும் இண்டியா விஜயத்தின் போது இன்னும் விஸ்தாரமானான். அரச புரசலாக பத்மாவிடம் விஜாரித்ததில் மெஷினெல்லாம் துபாயில் வாங்கி அது பாட்டுக்கும் தூங்குவதாக சொல்லி ஆதங்கப்பட்டாள்.

என் நண்பன் வாசு கவலைப்பட்டதாக தெரியவில்லை.

கொஞ்ச வருஷம் கழித்து துபாயை காலி பண்ணிக்கொண்டு மெட்றாஸ் திரும்பிய போது வாசு புல் ஷேப்பில் வந்திருந்தான். அவன் கழுத்து காணாமல் போயிருந்தது.

ஒருநாள் சாயங்காலம் நாரத கான சபாவில் ஒரு பாடகியின் அறுவை கச்சேரியில் (அவள் ராகத்தை விட புடவையே பளிச்சென்று இருந்தது. அந்த கச்சேரிக்கு போனதில் எனக்கு ஒரு புடவை செலவு...) அவனை பார்த்தேன். உடம்பை குறைக்க ஏதோ மாஸ்டரிடம் போவதாக சொன்னான். மிஸ்டர் குப்தாவாம். ரொம்ப எக்ஸ்பர்ட்டாம். மெட்ராஸில் எல்லா நடிகர்களுக்கும் அவர்தான் டய்டீஷியனாம். அதோடு அரபிக்ஸ் வேறு கத்துக்கொடுப்பாராம். என்னையும் சேர சொன்னான்.

நான் அதுவரை ஏதோ அரபிக்ஸ் என்றால் துலுக்கர்களின் பாஷை என்றுதான் தெரிந்து வைத்திருந்தேன். ஆனால், குப்தாவின் அரபிக்ஸில் உடம்பு இளைக்குமாம்.

என் இடதுபக்கத்துக்காரி வேறு நீங்களும் சேருங்களேன் என்றாள். ஆனால், அவன் சொன்ன பீஸை கேட்டதுமே நான் இளைத்துதான் இருக்கிறேன் என்று சொல்லி விட்டேன்.

பின் ஒருநாள் அவன் வீட்டிற்கு போயிருந்தேன். ஒன்னும் இளைக்க காணும்.

“என்னடா ஆச்சு குப்தா மாஸ்டர்” என்றேன்.

அவன் 'எல்லாம் சுத்த ஹம்பக், ஜெயராமா! பத்தாயிரம் ரூபாயும் பத்து கிலோவும் உடனே குறைந்தது. பின்னாடி, ஒரு மாசத்துல, பதினைந்து கிலோவா திரும்பி வந்துடுத்து. ரூபாயைத்தான் திரும்ப காணோம்” என்றான்.

பத்மா உடனே குறுக்கே பேசினாள். 'எக்சர்சைஸ் பண்ணிதான் கொறைக்கணும். இந்த டயட் விஷயங்லாம் டெம்பரரிதான் தெரியுமோ’ என்றாள்.

வாசு அசடு வழிந்தான். “என்னதான் சொல்லு. யோகாப்யாஸம் மாதிரி ஆகாதுடா. அதுல இல்லாததா. இப்போ ஒரு பர்ஸ்ட்கிளாஸ் யோகா ட்ரையினிங் சேர்ந்திருக்கிறேன். திருமூலர் யோக நிலையம். ரங்காச்சாரி ரோடில. அற்புதமா போறது' என்றான்.

சரியான ‘சற்றும்-மனம்-தளரா-விக்கிரமாதித்தன்” தான்.

எப்படியோ இளைத்தால் சரி என்று வாழ்த்திவிட்டு வந்தேன்.

இது நடந்து சில மாதங்களுக்கு பின், ஒருநாள் என் பார்யாள் வாசு வீட்டுக்கு போய் வந்தாள். வந்ததும் கிண்டலாக ‘உங்க பிரண்ட் வாசு ஒரே ஜெனிபர் லோபஸ் படமா மாட்டி வைச்சிருக்கார் வீட்டில’ என்று சொன்னாள்.

எனக்கு ஒரே ஆச்சரியம்

இதற்காகவே, ஒருநாள் மாலை அவன் வீட்டிற்கு போனேன். வாசு என்னிக்கும் இல்லாத திருநாளாய் டிவி பார்த்துக்கொண்டிருந்தான். நான் பார்த்தே இராத ஒரு சேனலில் V என்று மஞ்சள் கலரில் போட்டு இங்கிலீஷ் பாப் ம்யூஸிக். டிவியில் ஜெனிபர் லோபஸ் நெறுக்கி முறுக்கி குனிந்து நிமிர்ந்து பாடிக்கொண்டிருந்தாள். பாட்டு ஒன்றும் புரியவில்லை. அது என்ன வீடியோவோ தெரியவில்லை. என்னவோ டப்டப் என்று போட்டோ ஆல்பம் மாதிரி வேகமாய் மாறிக்கொண்டே இருந்தது. பாட்டை விட படங்கள் சூடாக இருந்தது.

நான் வந்ததை வாசு கண்டுக்கவே இல்லை. ‘என்னடா இது டிவில்ல கண்றாவி” என்றேன். ‘நல்லா கேளுங்க...’ என்று பத்மா ஒத்து ஊதினாள்.



இதுதான்டா ஜெனிபர் லோபச் என்றான். என்னமா சிக்குன்னு இருக்கா பாரு (சத்தியமாய் அவன் வார்த்தைகள்....) உடம்பு கண்ட்ரோலுக்கு என் ரோல் மாடல்டா என்றான். “டய்ட்டில் இருக்கிறவர்களுக்கு இது மாதிரி ரோல் மாடல்தான் சரியான மோடிவேஷன் தெரியுமோ” என்றான்.

அவனுக்கு வீட்டில் சாப்பாட்டு கட்டுப்பாட்டில் கஷ்டப்படுகிறான் என்று தோன்றியது.

போதாதக்கு அவன் ரூமில் வேறு ஜெனிபர் படம் மாட்டி வைத்துக்கொண்டிருந்தான். (அந்த போட்டோவை நெட்டில் தேடி இங்கு போட்டிருக்கிறேன்)

அப்புறம் பெரிய லெக்சர் கொடுத்தான். ஜெனிபர் லோபஸ் எவ்வளவு உயரம், எடை, அவள் என்ன எக்சர்சைஸ் பண்ணுகிறாள். என்றெல்லாம் ஏகத்துக்கு பேசினான். ஜெனிபர் லோபஸின் தமிழக ரசிகர் தலைவராக இருப்பான் போல.

'இதிலே ஆச்சரியம் தெரியுமோ. ஜெனி (இப்படி சுருக்கிதான் சொன்னான்) ஒரு டயட்டும் இல்லாமல் இவ்ளோ சிக்குன்னு இருக்கா தெரியுமோ. எல்லாத்தையும் எப்போதும் சாப்பிடறாளாம்' என்று ஏக்கத்துடன் சொன்னான்.

'ஜெனி மாதிரி பாடி வெச்சுண்டா என்னத்த வேணுமானாலும் சாப்பிடலாம் ' என்று தீர்மானமாக சொன்னான்.

அது என்னவோ மெடோபாலியோ என்னவோ ஒன்று உடம்பில் இருக்கிறதாம். அது வேகமாக ஓடினால், உடம்பு பெருக்காதாம். எனக்கு அவ்வளவாக புரியவில்லை. இருந்தாலும். என் மடத்தனத்தை காட்டிக்காமல் ஆமாம், ஒகோ, பேஷ் என்றெல்லாம் போட்டேன்.

இன்னும் சில மாதங்கள் பிறகு, அவன் வீட்டுக்கு என் மனைவியுடன் ஒருநாள் வாசு வீட்டுக்கு போயிருந்தேன்.

ஏழெட்டு ஆப்பிள், நிறைய ஆரஞ்சுப்பழம் இன்னும் என்னொன்னவோ கலர் கலராக நிறைய அடுக்கி வைத்துக்கொண்டு சோபாவில் உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

எனக்கு இதைப்பார்த்ததும் ஆச்சரியமாய் இருந்தது. 'என்னடா வாசு, டயட்டெல்லாம் இல்லையா' என்றேன்.

அவன் சிரித்தான். “ஜெயராமா. உனக்கு லேட்டஸ்ட் சயன்ஸ் தெரியல போலருக்கு. டயட்டால உடம்பு கொஞ்சமும் இளைக்காதுன்னு கண்டு பிடிச்சிருக்கா' என்றான்.

“அதெப்படிடா. பின்ன இளைக்க என்ன பண்ணனும்?” என்று கேட்டேன்.

'அப்படிக்கேளு! உடம்பு இளைக்க நிறைய சாப்பிடணும்’ என்றான். இது என்னடா கூத்து என்று நினைத்துக்கொண்டேன்.

‘அதாவது நெகடிவ் புட்..' என்றான்.

நான் திருதிரு என்று முழித்தேன். அவன் என் அறியாமையை பார்த்து இன்னும் சந்தோஷமானான். உடனே ஒரு லெக்சர் குடுத்தான்.

அவன் சொன்னதிலிருந்து எனக்கு தெரிந்தது இதுதான். நெகடிவ் காலரி புட் என்று பல ஐடங்கள் இருக்கிறதாம். நிறைய பழங்கள், காய்கறிகள் இதில் சேர்த்தி. அந்த சாமான்களை எத்தனை சாப்பிட்டாலும் பெருக்காதாம். மாறாக, ஒவ்வொரு முறை அவற்றை சாப்பிடும்போதும் உடம்பு இன்னும் இளைக்குமாம்.

'இதெப்படிடா சாத்தியம். இதெல்லாம் ஏமாற்று வேலை' என்றேன்.

'போடா முட்டாள். இதுதான் லேட்டஸ்டாக கண்டு பிடித்திருக்கிறார்கள். இங்க பாரு” என்று ஒரு புஸ்தகத்தை வேறு காட்டினான்.

“அதாவது, உதாரணத்துக்கு ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடம்பில் 20 கலோரி குறையும். தெரியுமா. அப்படியே தினசரி பத்து ஆப்பிள் சாப்பிட்டால், 200 கலோரி குறையலாம். எவ்வளவுக்களவு சாப்பிடறயோ அவ்வளவு இளைக்கலாம்” என்று சொல்லிவிட்டு கூடையிலிருந்து இன்னொரு ஆப்பிளை எடுத்து ஆசையாக கடித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

(பின்னால் வீட்டுக்கு வந்து அவன் சொன்ன புஸ்தகத்தை இன்டர்நெட்டில் பார்த்தேன். இம்மாதிரி ஒரு கூத்து இருக்கிறது நிஜம்தான்)

என்னிடம் பத்மா வருத்தப்பட்டாள். 'இவர் கூத்து தாங்கமுடியவில்லை. தினசரி நூறு ரூபாய்க்கு மேல என்னத்தயோ வாங்கிண்டு வந்து சாப்பிட்டா இளைக்கும் என்று நன்றாக சாப்பிட்டுவிடுகிறார்' என்றாள்

சோபாவில் ஒரு கூடையில் ஏதோ தழைகள் வேறு பரத்தியிருந்தது. அதில் ஒரு கெட்டியான தண்டை எடுத்து வாயில் கடித்துப் பார்த்தேன்.

வாசு துடித்துப்போனான். ‘டேய் அசடு. அதை தொடாதே’ என்றான்.

என்னடா என்றேன்.

‘டேய் இது என்ன தெரியுமா? இது சிலேரி’ என்றான்.

எனக்கு ஹிலேரியைத்தான் தெரியும். கிளின்டனின் அபிஷியல் மனைவி.

“இது என்ன விலை தெரியுமா?. மெட்ராஸில் எவ்வளவு கஷ்டப்பட்டு நான் தேடிப்பிடித்து வைத்திருக்கிறேன். சும்மா ஆடு மாதிரி மேயாதே’ என்று கோபித்தான்.

இது நடந்து பல மாதம் கழித்துதான் இந்த அபிராமபுரம் சிக்னல் நிகழ்ச்சி.

சிக்னலில் அவனைப்பார்த்த பின் அடுத்த வாரம் என் வீட்டுக்கு வந்திருந்தான். ரொம்பவும் சாந்தமாக முகம் மலர்ந்து இருந்தான். பெருத்த உடம்பு நடந்தாலே மூச்சுவாங்கியது.

‘எங்கடா அவசரமா அன்னைக்கு போனே?’ என்றேன்.

என் வீட்டரசி விருந்தினருக்கு சில ஸ்வீட்ஸ் கொண்டு வைத்தாள். டயட்காரன் ஸ்வீட்டா சாப்பிடுவான்.

நான் என் மனைவியிடம் வேற ஏதாவது லைட்டா குடு என்றேன். “இல்லை இருக்கட்டும்” என்று ஸ்வீட் தட்டை பக்கத்தில் நகர்த்திக்கொண்டான். எனக்கு ஆச்சரியம்.

“ஏது ஸ்வீட். நன்னாருக்கே’ என்றான்.

‘குழந்தையை பார்க்க ஊரிலிருந்து என் அம்மா வந்திருந்தாள். கொண்டு வந்திருந்தாள்’ என்றாள் என் மனைவி. பிறந்த வீட்டு பெருமையில் முகம் மலர்ந்தது.

‘பேஷ். பேஷ்... அதான் ஜோரா இருக்கு. இன்னும் என்ன வந்தது’ என்று கேட்டான்.

என் மனவியோ சந்தோஷமாக மைசூர்பாகும் நாடா பகோடாவும் கொண்டு வந்தாள்.

‘சபாஷ். க்ருஷ்ணா ஸ்வீட்டா! என்னமா போடறான். ஆனா, இந்த பார்முலா சீக்ரெட் அவுட் ஆயிடுத்தாமே’ என்று கேட்டுக்கொண்டே இரண்டு விண்டு வாய்க்குள் போட்டுக்கொண்டான்.

‘நாடா பகோடா உங்க அம்மா பண்ணினதா. ரொம்ப நன்னா இருக்கு’ என்று மைசூர் பாகுக்கு சைடாக தொட்டுக்கொண்டான்.

என் மனைவி இன்னும் பிறந்த வீட்டு பெருமையில் ‘அம்மா திரட்டிப்பாலும் கொண்டுவந்தா. கொஞ்சம் சாப்பிடுங்க...’ என்று அது வேறு வந்து இறங்கியது.

நான் மெதுவாக ‘வாசு, போனவாரம் பிஸியோ” என்று கேட்டு வைத்தேன்.

வாசு வாயில் மைசூர்பாகோடு தலையை ஆட்டினான். ‘அது ஒன்னும் இல்லடா. என் யோகா டீசர் மண்டய போட்டுட்டார். காலங்கார்த்தால ந்யூஸ். அதான் வேகமா போய்க்கிட்டிருந்தேன்’ என்றான்.

எனக்கு தூக்கிவாரிப்போட்டது.

‘ராத்திரி படுத்தவர்டா. கார்த்தால எழுந்திருக்கல. என்னமா யோகா பண்ணுவார்... அவங்க ப்ராப்தம் படிதான் நடக்கும். இந்த எக்சர்சைஸ், யோகா, டயட் எல்லாம் சுத்த ஹம்பக், ஜெயராமா! அவர் ஜென்மா முழுக்க யோகாதான் பண்ணினார். என்ன பிரயோசனம்? டயட்டாவது ஒன்னாவது. எல்லாம் உடம்பு வாகு. இதுக்காக கண்ட்ரோல் எல்லாம் சுத்த மடத்தனம்’ என்றான்.

வாசு முகத்தில் ஒரு ரிலீப் தெரிந்தது. ரொம்ப வருஷங்களுக்கு பிறகு அவன் தன் உடம்புடன் சமாதானம் செய்து கொண்டு விட்டான் என்று நினைக்கிறேன்.

போகப்போக பார்க்க வேண்டும்...


===================


இது ஒரு உண்மை நிகழ்ச்சி. என் நண்பன் வாசுவுக்கு ப்ளாக் படிக்கும் கெட்ட பழக்கம் இல்லை என்பதால் தைரியமாக எழுதினேன். யாராவது வாயை வைத்துக்கொண்டு வம்பு பண்ணாதீர்கள்