Aggregated by Thenkoodu.com - Tamil Blogs Portal

விருது

படைத்தவனுக்கு விருது. படிப்பவனுக்கு விருந்து...

Monday, May 22, 2006

இந்தியாவில் சிறுபான்மையினரின் தீண்டாமை

(குறிப்பு: இந்த பதிப்பில் 'தீண்டாமை' என்ற சொல் aparthid என்கிற ஆங்கில வார்த்தையை குறிக்கிறது. untouchability அல்ல. aparthid க்கு இதுதான் சரியான வார்த்தையா என்பது தெரியவில்லை....)


இந்தியாவில் பெரிய அளவில் திட்டமிடப்பட்டு இந்துக்களுக்கு எதிராக தீண்டாமை குற்றம் முஸ்லிம் மற்றும் கிருத்துவர்களால் பல வருடங்களாக செயல்படுத்தப்படுகிறது.

சமீபத்தில் சுலேகா.காம் என்கிற தளத்தில் ஒரு கடிதம் பார்த்தேன். அதில் இவ்வாறு ஆதாரத்துடன் கூறப்பட்டுள்ளது.

இதை இங்கே படிக்கலாம்.

http://www.sulekha.com/news/nhc.aspx?cid=450138

இந்த கடிதம் மூர்த்தி முத்துசாமி என்கிறவர் அப்போதய (ஜூலை 2005) அமெரிக்க வெளியுறவு மந்திரிக்கு எழுதிய கடிதம். இவர் ஒரு அமெரிக்க குடிமகன். இந்திய அமெரிக்க இன்டெலக்சுவல் போரம் என்ற அமைப்பை சார்ந்தவராம்.

அவர் கடித்த்தில் முக்கியமாக எனக்கு தெரியவந்தவை சில விஷயங்கள்.

சமீப காலம் வரை, தென்னாப்பிரிக்காவில் சிறுபான்மையினர் அதிகாரத்தை தங்கள் கையில் வைத்துக்கொண்டு பெரும்பான்மை சொத்துக்களை அநியாயமாக குவித்துக்கொண்டார்கள். அம்மாதிரி நிலை இந்தியாவிலும் நடந்துவருகின்றது.

இதற்கு இந்திய அரசியல் அமைப்பு சட்டம் துணைபோகிறது.

கிருத்துவர்களின் இந்து தீண்டாமை;

மூன்றாம் தர நாடுகளில் வெகுவாக முயற்சித்து “மத அறுவடை” என்று தங்கள் ஆக்கிரமிப்புகளை பரப்பிவரும் கிருத்துவர்கள் அம்மாதிரி செயலுக்காக பிறித்தாளும் கொள்கை, மற்றும் தீண்டைமையை இந்தியாவில் கை கொண்டுள்ளார்கள்.

அதற்கு ஆதாரமாக அவர்களின் எல்லா அமைப்புகளிலும் இந்துக்களை தவிர்த்து அவர்கள் கை கொள்ளும் தீண்டாமையை நிரூபிக்கிறார்கள்.

கீழ்க்கண்ட தகவல்கள் அந்த அமைப்புகளின் இணைய தளத்திலிருந்தே சரிபார்த்துக்கொள்ளலாம்.

1. மதுரை அமெரிக்கன் காலேஜ்; இளம் விரிவுரையாளர்களில் 95% (அதாவது 22ல் 21பேர்) கிருத்துவர்கள். எல்லா விரிவுரையாளர்களிலும் சேர்த்துப்பார்த்தால் 66% (அதாவது 122ல் 81 பேர்) கிருத்துவர்கள்.

2. சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி; 60% கிருத்துவர்கள் (அதாவது 118ல் 71 பேர்)

3. ஆளுவா யூனியன் கிருத்துவ கல்லூரி; 83% கிருத்துவர்கள் (அதாவது 93ல் 77 பேர்)ந

4. மும்பை செயின்ட் சேவியர் கல்லூரி; 42% கிருத்துவர்கள் (அதாவது 132ல் 56 பேர்)

இந்தியாவில் கிருத்துவர்கள் 4% தான். (கேரளாவில் 19%. தமிழ்நாட்டில் 7%. மகாராட்டம் 5%. என்று சிறிது வேறுபடும்)

இவ்வாறு இருக்கும்போது, இதை திட்டமிட்டு செயல்படுத்தப்படும் தீண்டாமை இல்லாமல் வேறு என்ன?

மேலும் கிருத்துவர்கள் இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கல்வி நிறுவனங்களை கட்டுப்பாட்டில் கொண்டுள்ளார்கள் என்பது வெளிச்சம். இந்திய நேஷனல் சாம்பிள் சர்வே 1998ன் படியும் இது நிரூபணமாகிறது.

இந்து, முஸ்லிம் சமுதாயங்களை விட கிருத்துவர்களின் படிப்பு சதவீதம் அதிகமாவதற்கு காரணம் இதே. வெளிநாட்டு கிருத்துவ மத பரப்பு அமைப்புகள் மற்றும் ஆக்கிரமிப்பு அமைப்புகள் சட்டத்துக்கு பின்பக்கமாக இந்த நிறுவனங்கள் மூலம் சட்டவிரோதமாக இந்துக்களுக்கு எதிராக தீண்டாமையை பரப்புகிறார்கள்.

முஸ்லிம்களின் தீண்டாமை;

1947ல் இணைந்த இந்தியாவின் 25% நிலப்பரப்பு 24% மொத்த முஸ்லிம்களுக்கு துண்டு போடப்பட்டது. அதாவது, 25% நிரந்தர இட ஒதுக்கீடு இதன் மூலமாக அவர்களுக்கு கிட்டியது.

உடனே அவர்கள் தங்கள் பகுதிகளில் இந்துக்கள் இல்லாமல் செய்தார்கள். 1947 ல் பாகிஸ்தானில் 20% மற்றும் பங்களாதேசத்தில் 30% ஆக இருந்த இந்து, சிக் மக்கள் இன்று 2% மற்றும் 10% (பங்களாதேஷில்) ஆக குன்றிவிட்டார்கள். இது இந்து, சீக் மக்களை இந்தியாவுக்கு துரத்துவதின் மூலமாக ஏற்பட்டது.

இதை இப்பொழுது 1998 முதல் காஷ்மீரிலும் இஸ்லாமியர்கள் செயல்படுத்தி வருகிறார்கள்.

தற்போதய இந்தியாவில் இஸ்லாமியர்களின் மனநிலை என்ன.

கீழ்கண்ட இந்த தகவல்களை பாருங்கள்;

1. ஜாமியா மிலீயா பல்கலைகழகம். புதுதில்லி; (அரசு சார்ந்தது. ஆனால், முஸ்லிம்களால் கட்டுபடுத்தபடுகிறது..) 88% முஸ்லிம் விரிவுரையாளர்கள் (அதாவது 329ல் 288 பேர்) (இவை ஹூமானிட்டீஸ் மற்றும் மொழி துறைகளை தவிர்த்து. அவற்றையும் சேர்த்தால் முஸ்லிம்கள் விழுக்காடு இன்னும் கூடும். )
2. அலிகர் முஸ்லிம் பல்கலைகழகம். (அரசு சார்ந்தது. ஆனால், முஸ்லிம்களால் கட்டுபடுத்தபடுகிறது..) 90% முஸ்லிம்கள் (அதாவது 671ல் 603 பேர்)
இதற்குமேல், இந்த பல்கலைகழகத்தில் முஸ்லிம் மாணவர்களுக்காக 50% ரிசர்வேஷன் வேறு இருக்கிறது.)

முஸ்லிம்கள் இந்தியாவில் 14% இருக்கும் போது, இந்த நிலைமை இருக்கிறது என்றால், இது இஸ்லாமியர்கள் இந்துக்கள் மீது செலுத்தும் தீண்டாமை என்பது வெளிப்படை.

இந்து சமுதாயத்தில் படித்தவர்களுக்கு சற்றும் குறைவில்லை.

அவ்வாறு இருக்கும்போது இவர்கள் திட்டமிட்டு இந்துக்களை ஒதுக்குவது ஏன்?

கேரளாவில் பல முக்கிய துறைகளில் முஸ்லிம்கள் இந்துக்கள் மீது தீண்டாமையை செயல்படுத்திவருகிறார்கள். இதில் கல்வித்துறையை முக்கியமாக இவர்கள் எடுத்துகொள்கிறார்கள். கேரளாவில் 11% மட்டுமே இந்து அல்லது அரசாங்க கல்வி நிறுவனங்கள். மீதமுள்ளவை எல்லாம் முஸ்லிம், கிருத்துவ அமைப்புகள் கையில் உள்ளன.

இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட கேரளாவில் கடந்த 25 வருடமாக கல்வித்துறையை கையில் கொண்டு முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சி இந்துக்கள் மீது தீண்டாமையை செயல்படுத்துகிறது, என்கிறார் பேராசியர் இசாக்.

http://www.saveindia.com/for_hindus_in_kerala_it.htm

பெரும்பான்மை கல்வி இடங்கள் இன்று சிறுபான்மையினரால் கட்டுபடுத்தப்பட்டு அவர்களால் இந்துக்களை தீண்டாமை படுத்தி வருகிறார்கள்.

இந்த சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களில் விரிவுரையாளருக்கு அமைப்பு சுதந்திரம், தனிமனித சுதந்திரம் மறுக்கப்படுகிறது.

இந்துக்களின் சமய நிறுவனங்கள் அரசாங்கத்தால் கட்டுபடுத்தப்பட்டு அந்த அரசாங்கங்கள் சிறுபான்மையினரால் நடத்தப்படுகின்றன. இந்து சமய பணங்கள், இந்துக்கள் அல்லாத விஷயங்களில் உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்து கோவில் பணத்தில் சில அரசாங்கங்கள் முஸ்லிம் ஹஜ் யாத்திரைக்கு பணம் வழங்குகின்றன.

மேலும் பல தகவல்கள் இந்த இடத்தில் படித்தேன்.

நன்றி

15 Comments:

At 6:55 am, Blogger Sivabalan said...

இந்தியாவில் அநேகம் நகரங்களின் மையப்பகுதியில் கிருஸ்துவ தேவாலயங்கள் தான் உள்ளன.

ஒரு வித்தியசமான பதிவு!!

நன்றி!

 
At 7:01 am, Blogger S.L said...

Nice article.

 
At 7:06 am, Anonymous Anonymous said...

Appadiye Banaras Hindu University'l ethanai Muslimkal irukkaangannu sonna nallaa irukkum. Vera polappe illaya saamy.

 
At 7:25 am, Blogger ஜோ/Joe said...

Ha ha ha...Very funny arguements.

 
At 7:26 am, Blogger ஜயராமன் said...

பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் முஸ்லிம்கள் எத்தனை பேர் என்று மேதாவித்தனமாக அனானி கேட்பது எதற்கு?

ஒரு தவறை பேசும்போது மற்றொரு தவறு என்று ஒன்றை (உண்மையாக இல்லாவிட்டாலும்) சுட்டிக்காட்டப்பட்டால் இது எப்படி விடையாகும்.

நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்? பனாரஸ் இந்து பல்கலைகழகத்தில் முஸ்லிம்கள் குறைவாக இருந்தால் நான் படித்த கடிதத்தின் தகவல்கள் பொய்யாகி விடுமா? என்ன மாதிரி லாஜிக் இது.

சரி. நீங்கள் சொன்னீர்களே என்று பனாரஸ் இந்து பல்கலைகழக இணைய தளத்தில் பார்த்தேன்.

தள முகப்பில் முதன்முதலில் இந்த வரிகளை பதித்திருக்கிறார்கள்.

India is not a country of the Hindus only. It is a country of the Muslims, the Christians and the Parsees too.

என்ன அருமை?

இந்த பல்கலை கழகத்தில் என்ன குறைபாடு கண்டுள்ளீர்கள்?

அந்த பல்கலைகழக குறிக்கோள்களில் முதலாவதாக சம்ஸ்கிருதம், மற்றும் இந்து சாத்திர போதனை இருக்கிறது என்று இணைய தளத்தில் குறித்துள்ளது.

அவ்வாறு இருப்பின் இதில் முஸ்லிம்கள் குறைவாக இருக்க இயல்பு. ஏனென்றால், முஸ்லிம்கள் இந்த சமய கல்வி கற்றவர்கள் கிடையாது.

ஆனால், நான் கொடுத்தது சாதாரண செகுலர் விஞ்ஞான கல்விசாலைகள்.

மதரஸாக்களில் முஸ்லிம்கள் அதிகம் இருப்பது இயல்பு, தவறல்ல.

நீங்கள் ஒன்றுக்கொன்று முறணாக ஆதாரம் இல்லாமல் பேசுவது, தங்களிடம் பதில் இல்லை என்பதையே தெளிவாக்குவதாக உணர்கிறேன்.

பெயரில்லாமல் தாங்கள் பதித்ததும் தங்கள் பதிலில் தங்களுக்கு நம்பிக்கையின்மையே காட்டுவதாக நான் உணர்கிறேன்.

வேறு வேலை பார்க்கவேண்டியது நானில்லை.

நன்றி

 
At 8:07 am, Blogger Muse (# 01429798200730556938) said...

ஜெயராமன்,

அருமையான ஒரு பதிவு. ஒரு குத்து (+) போட்டேன். டப்பாங்குத்து ஆட்டமும் போட்டேன்.

பல்கலைகழகங்கள் அளவிற்கு ஏன் போகிறீர்கள்?

பெங்களூரில் ஸிவாஜி நகர் மார்கெட்டில் பர்னிச்சர்கள் விற்கும் கடைகள் உள்ளன. முழுவதும் முஸ்லீம்களின் கண்ட்ரோலில்தான். வேறு எந்த மதத்தவரும் நுழைய முடியாது. ஹிந்துக்கள் அதிகமுள்ள பகுதிகளில் இஸ்லாமியர்களும் சுதந்திரமாக வியாபாரம் செய்கிறார்கள்.

என் வீட்டிற்கு எதிர்த்தாற் போல ஒரு பில்டிங் இருக்கிறது. அதன் ஓனர் ஒரு ஹிந்து. எல்லா மத, ஜாதி மக்களும் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் கடந்த ஒரு சில மாதங்களாக அந்த பில்டிங்கை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை, அந்த பில்டிங்கிலேயே கடை வைத்துள்ள ஒரு முஸ்லீமுக்கு கொடுத்திருக்கிறார். இந்த இஸ்லாமிய நண்பர் பொறுப்பை ஏற்றுக்கொண்டது முதல் அந்த வீட்டில் குடியேறிவருபவர்கள் அனைவரும் இஸ்லாமியர்களே.

>>>> ஆப்படியெ Bஅனரச் Hஇன்டு ஊனிவெர்சிட்ய்'ல் எதனை Mஉச்லிம்கல் இருக்காஙன்னு சொன்ன நல்லா இருக்கும். Vஎர பொலப்பெ இல்லய சாம்ய்.<<<

இந்தியா, இந்தியா என்று ஒரு நாடு இருக்கிறது. அங்கே அலிகார், அலிகார் என்றொரு ஊரிருக்கிறது. அந்த ஊரில் ஒரு யூனிவர்ஸிடி. அதாவது நண்பர் அனானி போய் வருகிறாரே அந்த எல் கே ஜீ, யு கே ஜியை விட பெரிய பள்ளிக்கூடம் அது. அதையும் விட பெருசு. வானம் வரைக்கும். அங்கே ஒரு மாஸம் முன்னாலே எதோ கோர்ட் உத்தரவை எதிர்த்து ஹிந்துக்களாகப் பார்த்து வெட்டிப் போட்டார்கள். இது சிறுபான்மையினர் செய்த உயர் ஆன்மீகத் தொண்டு என்பதால் மீடியாக்களும் அது போன்ற புனிதமான விஷயங்களையெல்லாம் மறைத்தும், மறந்தும் போயிட்டாங்க. செத்தது என்ன பிரியங்கா காந்தி வீட்டு நாயா பெருசா நியூஸிலெல்லாம் போட?

>>>> இந்துக்களை பெரும்பான்மையாக கொண்ட கேரளாவில் கடந்த 25 வருடமாக கல்வித்துறையை கையில் கொண்டு முஸ்லிம் லீக் என்ற அரசியல் கட்சி இந்துக்கள் மீது தீண்டாமையை செயல்படுத்துகிறது, என்கிறார் பேராசியர் இசாக். <<<

இதுவரை ஹிந்துக்கள் எவருக்குமே அந்த மந்திரி பதவி கிடைத்ததில்லை. எந்த அரசாங்கம் வந்த போதிலும் என்று கேள்விப்பட்டேன்.

>>>> இந்துக்களின் சமய நிறுவனங்கள் அரசாங்கத்தால் கட்டுபடுத்தப்பட்டு அந்த அரசாங்கங்கள் சிறுபான்மையினரால் நடத்தப்படுகின்றன. இந்து சமய பணங்கள், இந்துக்கள் அல்லாத விஷயங்களில் உபயோகப்படுத்தப்படுகின்றன. இந்து கோவில் பணத்தில் சில அரசாங்கங்கள் முஸ்லிம் ஹஜ் யாத்திரைக்கு பணம் வழங்குகின்றன. <<<<

எப்படி திருப்பதி கோயிலின் சொத்துக்கள் கிருத்துவ சிறுபான்மையினருக்கு ஸ்ரீமான். ஸாமுவேல் ராஜசேகர ரெட்டியினால் அளிக்கப்படுகிறது என்கிற ஒரு கட்டுரையை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து திண்ணைக்கு அனுப்பியிருந்தேன். பிரசுரித்திருந்தார்கள்.

என் தங்கை படித்ததெல்லாமே கிருத்துவ பள்ளி நிறுவனங்களில்தான் (வேறு வழி?). இதனால் எங்களுக்கு பல சுவையான அனுபவங்கள் ஏற்பட்டன. இவைகளில் மதம் மாற்றும் முயற்சியும் ஒன்று.

 
At 5:56 pm, Blogger சல்மான் said...

இந்திய சமூகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களில் அவர்களின் மக்கள்தொகைக்கான விகிதாச்சாரத்தை விட அதிகமாக உள்ளவர்கள் முஸ்லிம்கள் என ஐ.நா 2003 பின்தங்கிய நாடுகளின் மனித வாழ்க்கைத்தரம் ஆய்வறிக்கை குறிக்கிறது. 2002-ல் வெளியான ஹிந்து பத்திரிகையின் சிறப்பு பகுதியில் சராசரி முஸ்லிமின் அவல வாழ்க்கை படம் பிடித்து காட்டப்படுகிறது. தமிழகத்தில் அரசு கணக்கின்படி 13% உள்ள முஸ்லிம் சமுதாயம் அரசு வேலை, கல்லூரி கல்வி இவற்றில், 2% க்கும் குறைவாக கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 30% தமிழக முஸ்லிம்கள் நடைபாதை, தள்ளுவண்டி தினசரி தொழிலாளர்களாக உள்ளனர். எஞ்சிய தொகையில் கணிசமான எண், சுயமாக ஏதொ ஒரு நிலையில்லாத தொழில் புரியும் இக்கட்டில் உள்ளனர்.

இந்துக்களின் மேல் தீண்டாமையை மேற்கொண்டு, மற்றவர்களை புறந்தள்ளி, மேற்கண்ட அற்புதமான ஒரு வாழ்க்கத்தரத்தை எட்டியுள்ளனர் இந்திய முஸ்லிம்கள்.

கடலோர குப்பங்களிலும், நகரத்தின் சேரிகளிலும், கிராமத்தின் ஓரசாரங்களிலும், இந்துக்களின் உயர்சாதியிரை வராமல் தள்ளிவைத்து விட்டு தமக்கு மட்டுமே பட்டா போட்டு வாழ்வது முஸ்லிம்கள்தான்.

மேலும், பானைக்கு சோறு பதமாக, இவர்களின் தீண்டாமை காரணமாக, இந்தியாவின் தேசமுக்கியத்துவம் வாய்ந்த உயர்கல்வி நிறுவனங்களில் கிட்டத்தட்ட 0% மட்டுமே இருக்கின்றனர். எங்களின் கண்ணிற்கெட்டியவரையிலான சந்ததியில் முதல்முதலாக கல்லூரி வாசலில் கால்வைத்தவனாகவும், எங்களின் கண்ணிற்கெட்டியவரையிலான ஊர் முஸ்லிம்களில் உங்களை போன்று முஸ்லிம்களால் ஒடுக்கப்பட்டவர்களின் அழுகுரல் கேட்குமளவு உலக விஷயங்களை அறிந்தவனாகவும் விளங்க இந்துக்களின் மீது நான் சார்ந்த சமூகம் கொண்ட தீண்டாமைதான் காரணம்.

பாகிஸ்தானிலும், பங்களாதேசிலும், இன்னும் உலகமெங்கும், இந்துக்களின் மீது தீண்டாமை மேற்கொள்ளுவது உயர்தர வாழ்க்கை வாழும் இந்திய முஸ்லிம்கள்தான்.

உங்களை போன்ற 'உயர்குடி' பிஸ்தாம் ஐஸ்கிரீம் பேபிகளின் பார்வையில் நாங்கள் கையில் வைத்திருக்கும் கடலைமிட்டாய் கூட வெறுப்பு தரும் போது, அதை விட்டு தராமல், நீங்கள் தீண்டுவதை தடுக்க நினைக்கும் எங்களின் தீண்டாமை உங்களுக்கு அருவெருப்புதான்.

இது போன்று தீண்டாமை செய்யாமல் நாங்கள் அணைத்துச் செல்லும் பேரன்பு கொண்ட மற்ற இந்துச்சகோதர்களுக்கு புரியும் 'உண்மையான' தீண்டாமை

 
At 8:48 pm, Anonymous Anonymous said...

தமிழகத்தில் அரசு கணக்கின்படி 13% உள்ள முஸ்லிம் சமுதாயம் அரசு வேலை, கல்லூரி கல்வி இவற்றில், 2% க்கும் குறைவாக கண்டறியப்பட்டுள்ளது. சுமார் 30% தமிழக முஸ்லிம்கள் நடைபாதை, தள்ளுவண்டி தினசரி தொழிலாளர்களாக உள்ளனர். /

False statistics.

Muslims constitute only 5.5% of population of Tamilnadu.Further Muslim women are not allowed to work by muslims themselves.So muslims occupying 2% of government jobs is proportioante to their population.further many muslims want to work only in Gulf.

Population Staistics

http://www.neoncarrot.co.uk/h_aboutindia/qref_statistics_all.html

 
At 9:23 pm, Blogger Muse (# 01429798200730556938) said...

>>>> இந்திய சமூகத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழுள்ள மக்களில் அவர்களின் மக்கள்தொகைக்கான விகிதாச்சாரத்தை விட அதிகமாக உள்ளவர்கள் முஸ்லிம்கள் என ஐ.நா 2003 பின்தங்கிய நாடுகளின் மனித வாழ்க்கைத்தரம் ஆய்வறிக்கை குறிக்கிறது. ..blah.....blah...........blah.....blah...........blah.....blah....<<<<<

இத்தகைய மோசமான நிலையில் முஸ்லீம்கள் இருப்பது உண்மைதான். ஆனால், இவர்கள் முஸ்லீம்களாக மாறுவதற்கு முன்பிருந்தே இது போன்ற நிலையில் இருந்தவர்கள்தான். ஒருவேளை இவர்கள் முஸ்லீம்களாக மாறாமலிருந்திருந்தால் பொருளாதார, சமுதாய, அறிவுப் புலங்களில் முன்னேறியிருக்கலாம். பெண்களின் மீதும், தனிமனித சுதந்திரங்களின் மேலும் வன்முறை தொடுக்கின்ற (உ.ம்: குடும்பக் கட்டுப்பாடு) ஒரு மதத்திற்கு ஒரு இரண்டு வேளை கஞ்சிக்காகவும், இவர்களின் நல்வாழ்வுக்கு எதிரான ஹிந்து மதத்திலுள்ள சில இழிநிலைகள் மாறவே மாறாது என்கிற பொய்யினை நம்பியும் மதம் மாறிய இவர்களின் இந்த நிலை எதிர்பார்க்கக் கூடியதுதான்.

ஜெயராமன் கொடுத்திருந்த விஷயங்கள் எல்லாம் இஸ்லாமிய மதத்தில் இருக்கும் ஒரு சில உயர் பிரிவுகளுக்கு மட்டும்தான் கிடைக்கிறது போலும்.

இவர்களின் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதோடு, இனியும் இவர்கள் முன்னேறுவதற்கு இவர்கள் தற்போது அடைக்கலம் தேடியிருக்கும் மார்க்கத்தில் வழி இல்லை என்பதையும் தெளிவாக ஸ்டாடிஸ்டிக்ஸ் மூலம் விளக்கியிருந்த சல்மானின் முயற்சிகள் பாராட்டத்தக்கவையே.

 
At 2:29 am, Anonymous Anonymous said...

Hai,

Do you know onething, Palani Arulmigu Palaniyandavar Polytechnic is a Govt undertaken Institute. In that polytechnic staffs are 100% Hindus.

Mansoor

 
At 9:54 pm, Blogger லக்கிலுக் said...

உங்கள் கணக்கெல்லாம் சரி... இதுபோல இந்துக்களும் பொதுவான அமைப்புகளில் கூட இசுலாமியர்களையும், முஸ்லிம்களையும் ஒதுக்கித் தள்ளுகிறார்களே....

உதாரணத்துக்கு சென்னை ஐ.ஐ.டி.யில் இருக்கும் விரிவுரையாளர்களில் 97 சதம் பேர் இந்துக்கள் தான்... அதிலும் 70 சதம் பேர் பிராமணர்கள்....

இது பற்றி என்ன சொல்கிறீர்கள்?

 
At 10:04 pm, Anonymous Anonymous said...

Mansoor
It is run by the temple.

 
At 10:12 pm, Blogger ரவி said...

அப்படியே உங்க பதிவை காமெடியில ( நகைச்சுவை / நையாண்டி) சேர்த்துடுங்க

நன்றி..

 
At 8:05 am, Blogger வஜ்ரா said...

செந்தழல் ரவி,

இது நகைச்சுவையல்ல...ஊரு ரெண்டுபட்டா கூத்தாடிக்குக் கொண்டாட்டம் மாதிரி சிறுபான்மையினர் கல்லூரிகள், செழிக்கின்றன அதே வேளையில் ஜாதிச்சண்டையினால் இந்து அல்லது பெரும்பான்மையினர் கல்விக் கூடங்களில் பிரச்சனை மற்றும் அரசு அதில் கண்டபடி விளையாடிவருகிறது 70% இட ஒதுக்கீடி என்றெல்லாம்.

கேரளத்தைப் பார்த்தாலே தெரியும்...நாயர் எழவா பிரச்சனை தீராத பிரச்சனை, அதை வைத்து பாலிடிக்ஸ் செய்யும் கம்யூனிஸ்டுகள் அதனால் பயன் பெறுவது கிறுத்தவ மத கல்லூரிகள், பள்ளிகள்...

 
At 8:14 am, Blogger Unknown said...

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது.
மொத்த இந்தியாவில் முஸ்லீம்களில் எத்தனை விழுக்காடு உயர் பதவிகளில் இருக்கிறார்கள் என்ற கணக்கு சொல்லுங்களேன். அட்லீஸ்ட் தமிழகத்தில் மட்டுமாவாது.....
தமிழகத்தில் முஸ்லீம்கள் 5.5சதவீதம் என்பது பொய்க்கணக்கு.
எத்தனை முஸ்லீம் பெண்ணுக்கு வேலை கிடைத்தும் போகாமல் இருக்கிறார்கள்?!! என்று நிரூபிக்க முடியுமா?
இந்த பதிவை காமெடிப் பக்கங்களில் சேர்ப்பதுதான் சரி.

 

Post a Comment

<< Home